ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக சனிக்கிழமையன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் ஆப்பிள் டெய்லி அலுவலகம் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சொத்துக்கள் 18 மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பின்னர் முடக்கப்பட்டன. அதன் தலைமை ஆசிரியரையும் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
செய்தித்தாள் நீண்ட காலமாக சீனாவின் பக்கத்தில் ஒரு எதிரியாக இருந்து வருகிறது, இது ஹொங்கொங்கில் ஜனநாயக சார்பு இயக்கத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆப்பிள் டெய்லியின் வெளியீட்டாளரும் ஹொங்கொங் ஊடக அதிபருமான ஜிம்மி லாய் கடந்த ஆண்டு இதே சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஆப்பிள் டெய்லி முன்னதாக வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் வெளியீட்டை மூடலாமா வேண்டாமா என்று முடிவினை அறிவிப்பதாக கூறியது.
எனினும் அதற்கு முன்னதாகவே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.