கடலில் எரிந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ளால் இது வரை 200 கடல் வாழ் உயிரினங்கள் பலி !

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *