“இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்வதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது.” – சிறிதரன்

அண்9மய காலங்களில் இலங்கையின் கடல் வலயங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதானது மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் வடக்கின் கடற்பகுதிகளிலும் சீன ஆக்கிரமிப்பு தொடர்வதாக குற்றுஞ்சாட்டப்பட்டுள்ளது.

24188cf2 08bc 4283 97bf 037f78e37701

இந்நிலையில் இன்று கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் “இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்வதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது.” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் உடைய அகலக் கால்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை ஆனது தற்போது கிளிநொச்சியின் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அந்த அட்டை பண்ணையை செய்து வருகின்றார்கள்.

அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன.

அத்துடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.”  என தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *