நா.உ சிறீதரனை சீன கடலட்டை பண்ணைக்கு அழைத்து சென்ற படகு உரிமையாளரிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை !

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கௌதாரிமுனையில் சீனர்களால் நடாத்தப்படும் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கௌதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கௌதாரிமுனைக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் படகில் பயணித்து முற்பகல் 10.30 மணியளவில் கரை திரும்பியிருந்தனர்.

மேற்படி  குழுவினர் படகில் சென்று வந்த விடயம் செய்தியாக வெளிவந்த நிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர், நேற்றுமுன்தினம் மாலை மீனவர் சங்கம் ஊடாக படகின் உரிமையாளரான படகோட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விசாரணை தொடர்பாக மீனவர் சங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *