பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்குச் சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு (அந் நாட்டு நேரப்படி) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு மாகாணத்தின், ஜொலோ தீவில் தரையிறங்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் புதிதாக இராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்துள்ளனர் என்றும் அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள அபூ செய்யப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டடனர் என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *