“எதிர்க்கட்சியினரின் தேவையற்ற ஆரப்பாட்டங்களால் மக்கள் ஆதரவு பெற்ற மொட்டுக்கட்சியை ஒன்றுமே செய்ய முடியாது.”- பஷில்ராஜபக்ஷ

நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் ஐக்கியமக்கள் சக்தி , ஜே.வி.பி ஆகிய கட்சிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஜோன் கொத்தலாவல பல்கலைகழக சட்ட மூலம், பொருளாதார நெருக்கடி, சேதன உர பாவனையை கட்டாயப்படுத்துதல், தேவையற்ற கைதுகள் – கொலைக்குற்றவாளிகள் விடுதலை என அரசின் பல நகர்வுகளையும் எதிர்த்து இந்தப்போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தொடர் போராட்டங்கள் மேற்கொ்ளப்பட்டு வருவதுடன் சில இடங்களில் மக்களும் அணிதிரள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் கொரோனா தனிமைப்படுத்தல் சடடத்தை காரணம் காட்டி தொடர்நது கைது செய்யபடபடுகின்றனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஐக்கியமக்கள் சக்தியின் தலைமையில் பாரிய எதிர்ப்பு போராட்டம் சுதந்திரசதுக்கத்தின் முன்னால் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் “ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.” என  நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை  எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது.

நாட்டு மக்கள் மனதில் ‘தாமரை மொட்டு’ சின்னமே இருக்கின்றது. இந்த ‘மொட்டு’க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.

எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்குத் தூசு.

எனவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக்  கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *