“போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு.” – அமைச்சர் நாமல்ராஜபக்ஷ

நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் ஐக்கியமக்கள் சக்தி , ஜே.வி.பி ஆகிய கட்சிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் கொரோனா தனிமைப்படுத்தல் சடடத்தை காரணம் காட்டி தொடர்ந்து கைது செய்யபடபடுகின்றனர்.

கடந்த 8ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை  நாடாளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பெண் காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்தியிருந்ததுடன் ஊடகவியலாளர்களின் கமரா மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதே நேரம் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதான பொலிஸாரின் அடக்குமுறைகள் தொடர்பாக நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் சலசலப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதற்கு பதிலளித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர “பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திலும் சரி இந்த நடவடிக்கையை நான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *