“இணையத்தில் விற்கப்பட்ட சிறுமி – விசாரணையை நிறுத்த அரசு திட்டம் ” – ரோஹினி குமாரி விஜேரத்ன

15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நிறுத்த சிலர் அழுத்தம் கொடுக்கின்றன என்றும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *