13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – துறவி உட்பட நால்வர் கைது !

இலங்கையில் நாளுக்கு நாள் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரலித்து வருகின்றது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்படுகின்ற போதிலும் கூட துஷ்பிரயோகங்கள் எண்ணிக்கை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக அண்மையில் கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (என்சிபிஏ) விஷேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஒரு துறவி மற்றும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டனர்.

ராஜகிரியாவில் உள்ள ஓர் ஆலயத்தின் 39 வயதான தலைமை அதிகாரி மற்றும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 352இன் கீழ் வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *