திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *