கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சகலதுறை வீரரான இசுரு உதான !

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, 33 வயதான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இடதுக்கை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் 237 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதேபோல 34 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 விக்கெட்டுகளையும் 256 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *