11 பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – பதவி விலகினார் நியூயோர்க் நகர மேயர் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் அண்ட்ரூ குவோமோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, விசாரணை நடைபெற்றது. அதில் அவர், 11 பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரியவந்தது.

சுயேச்சைப் புலனாய்வுக் குழு ஒன்று, ஐந்து மாதம் அவர் மீதான புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் முடிவில், அமெரிக்கச் சட்டங்களை மீறிய செயல்களில் அவர் ஈடுபட்டதாக அறிவித்தது.

அதனையடுத்து, அவர் பதவி விலக சட்ட ரீதியான நெருக்குதல் ஏற்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடனும் மற்றவர்களும் அவரைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

பெண்களுடன் நகைச்சுவையாகவோ, அன்பாகவோ பழக முயன்றதை, அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டதாக அவர் சொன்னார். தொடர்ந்து ஆளுநராகப் பணிபுரிவதும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவதும் கடினமாக இருக்கும் என்பதால் தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குவோமோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதிவாய்ந்த வேட்பாளராகக் கருதப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *