“மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” – எம்.கே.சிவாஜிலிங்கம் இரங்கல் !

“இன மத பேதங்களை கடந்து செயல்பட்டவர் மங்களசமரவீர ஜனாதிபதியாகியிருந்தால் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பிரகாசமடைந்திருக்கும்.” என  என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Valvettithurai.org :: Tamil News, News about Valvai. (Valvettiturai,  Valvai, VVT, வல்வெட்டித்துறை, வல்வை)

அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாகக் கூறியவர். பல்லின ,பல்மத நாடு என்று உரத்துக் சொன்ன குரல் மங்களவின் குரல்.

தெற்கில் தெய்வேந்திரமுனையில் பிறந்த மங்கள வடக்கில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முனையிலுள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர்.

அமரர் மங்கள சமரவீர அவர்களினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தவறிவிட்டனர். மங்கள சமரவீர நாட்டின் ஐனாதிபதி பிரதமர் பதவிகளில் இருந்திருந்தால் இனப்பிரச்சனைகள் தீர்க்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்வுக்காக போராடிய அமரர் மங்கள சமரவீர அவர்களின் இறப்பிற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *