“அதிகரிக்கவுள்ள வாழ்க்கை செலவு.”- எதிர்கொள்ள தயாராகுமாறு இலங்கை மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை !

வாழ்க்கை செலவு அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கப்போகின்றது என அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இறக்குமதிகளிற்கு செலுத்துவதற்கான டொலர்களை பெற்றுக்கொள்வதில் வர்த்தகர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பால்மா உள்நாட்டு எரிவாயு கோதுமா உட்பட பல பொருட்களின் விலைகள் உள்நாட்டில் அதிகரிக்கவுள்ளன.
அமெரிக்க டொலர்கள் தொடர்பில் நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம் என்பதை நாங்கள் மறைக்கவிரும்பவில்லை. சர்வதேச சந்தையிலும் விலைகள் அதிகரிக்கின்றன. மேலும் சலுகைகளை வழங்கமுடியாது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *