“நிரூபமா ராஜபக்ஸ எனது சகோதரி. ஆனாலும் அரசியல் வேறு – உறவு வேறாம்.” – அமைச்சர் நாமல்

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்ச, ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் , எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டுவந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் நிரூபமா ராஜபக்ஸவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், நிரூபமா ராஜபக்ஸ எனது சகோதரியாக உள்ளார். எனினும் அரசியல் ரீதியாக அவர் எம்முடன் இல்லை. அவர் கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் தலைவர் சிறிசேனவுடன் இருந்தார். அதனால் உறவு வேறு அரசியல் வேறு. அதே நேரத்தில் அவர் நடேசனை மணந்துள்ளார். திருமணத்தால் கிடைப்பவை தொடர்பில் நம்மால் என்ன செய்ய முடியும்.

1990 – 1998 வரை இவர்கள் பணம் சம்பாதித்து வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யார் இருந்தார்கள் என்பதை ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா மெடம் ஆகியோரிடம் கேட்க வேண்டும் என்றும் நாமல் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *