“ரூபாய் மதிப்பு சரிவுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – ராஜித சேனாரத்ன

கொரோனா தொற்றினாலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை தவறு. இந்த ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவுக்கும் கொரோனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ரூபாய் ரூ .180.10 இலிருந்து ரூ .201.52 ஆக குறைந்துள்ளதுடன், இது 12% வீழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் ரூபாய் 8% பங்காளதேசம் 0.44%, நேபாளம் 2.48%, இந்தியா 2.23% மற்றும் ஆப்கானிஸ்தான் 3.33% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையின் ரூபாவானது வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸால் அல்ல.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் மேற்கோள் காட்டப்பட்ட மனித உரிமைகளை மீறும் நாடுகளில் இலங்கை 45 வது இடத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *