தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 80ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது !

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கைது செய்யப்பட்டதுடன் 18 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் 1,430 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் சரியான காரணமின்றி சோதனைச் சாவடிகளைக் கடக்க முயன்ற 232 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *