“சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை.” – தாய்வான் அறிவிப்பு !

சீனா  அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தாய்வான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. சீனா  தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என சீன ஜனாதிபதி அண்மையில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை என தாய்வான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

தாய்வான் தேசிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்வான் செய்யும் சாதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் அதிகரிப்பதாக கூறினார்.

மேலும் சீனாவுடன் சுமுகமான உறவை விரும்புவதாக தெரிவித்த சாய் இங்-வென் அதேசமயம் சீனாவின் அழுத்தத்துக்கு தாய்வான் மக்கள் அடிபணிவார்கள் என்ற மாயை இருக்கக்கூடாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *