ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா !

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு அமைய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகி இருந்தது.

இந்நிலையில், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவை மீள இணைப்பதற்கான, இரகசிய வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று(14) இடம்பெற்றது.

இதன்போது 193 நாடுகளில் 168 நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கமைய, 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆண்டுகளுக்கு அமெரிக்கா அங்கத்துவம் பெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *