இலங்கை வந்துள்ள ரஷ்ய யுத்தக்கப்பல் !

ரஷ்யாவிற்கு சொந்தமான யுத்த கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே, நாட்டிற்குள் இந்த யுத்த கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பல்சார் சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

குறித்த கப்பல்கள் சேவைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர், நாளை மறுதினம் (18) நாட்டை விட்டு செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *