ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மீது விடுதலைப்புலிகள் சாயம் பூசும் ஆளுங்கட்சி!

இலங்கை ஆசிரியர்கள் தங்களுடைய சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போராட்டங்கள் இலங்கையில் மிகப்பெரிய அதிருப்தி அலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. புாராட்டத்தை கட்டுப்படுத்தி பாடசாலைகளை வேகமாக தொடங்க அரசு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும் இலங்கை ஆசிரியர்கள் உடன்படுவதாயில்லை. இந்நிலையில் போராட்டத்தை முன்நின்று நடாத்தும் ஜோசப்ஸ்டாலின் மீது ஆளுங்கட்சியினர் புலிச்சாயம் பூசி ஆசிரியர்போராட்டத்தை நலிவடையச்செய்ய முயற்சிப்பது போல தோன்றுகிறது.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியைச் சேர்ந்தவர்.

அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றனர்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *