இலங்கையில் தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை !

இலங்கையில் தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் விதிமுறைகள் வர்த்தமானி ஊடாக வௌியிடப்படுவதாகவும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விதிமுறைகளை மீறுவதை குற்றமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *