இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகிலேயே பெரிய இரத்தினக்கல் கொத்து, டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த இரத்தினக்கல் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இடம்பெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கண்காட்சியில் இந்த இரத்தினக்கல் வைக்கப்படவுள்ளது.
உலகிலேயே மிக பெரிய இரத்தினக்கல் இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கடந்த ஜுலை மாதம் 28ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
510 கிலோகிராம் எடையுடைய இந்த கல், சுமார் 100 மில்லியல் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.