“இந்த நெருக்கடியான சூழலில் நீங்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாகவும் நன்றியுணர்வோடும் செயற்பட வேண்டும்.” என சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நிகழ்அவான்றில் கலந்து உரையாற்றியஆபாதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் ஒரு அமைச்சு கிடைத்து பணியாற்ற வேண்டும் என்று மக்களும் பெருமளவில் எதிர்பார்த்திருந்தார்கள். என்றாலும் நியமனம் வழங்கும் வேளையில் நான் சிறைச்சாலையில் இருந்த விடயம் அதன் பின் வந்த உட்கட்சிக் குழப்பங்கள், ஏனைய கட்சிகளிடமிருந்த பலவிதமான போட்டிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கொரோனா தொற்று காரணமாக உருவான பொருளாதார நெருக்கடி பணவீக்கம் பொருள்களின் விலை அதிகரிப்பு, உள்நாட்ட உற்பத்தி விழ்ச்சி, ஜனாதிபதி எடுத்த பசுமைத்திட்டத்தில் வந்திருக்கும் இடர்பாடுகள், நாடு பொருளாதார வீழ்ச்சிப் பாதையில் போய்க்கொண்டிருக்கின்ற பொழுது ஆசிரியர்களுடைய ஆர்ப்பாட்டம் என்று பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதுதான் ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு வாக்களித்த, கட்சியுடன் நிற்கிறவர்களுக் கௌரவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக எமக்கும் 600 வேலைகள் தரப்பட்டது.
அதைவிட சிறியளவிலான வேலைகள் தரப்பட்டிருக்கின்றன. அதனை விடவும் 300 கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி , கிராமப்புறங்களுக்கான வாழ்வாதாரத்திட்டங்கள் என பல வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இந்த விவசாயப்பிரச்சினைக்கும், அத்தோடு வருமான வீழ்ச்சிக்கும் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில், அல்லது 2023ஆம் ஆண்டிலே விடிவு காலம் வரும் அதற்கு நாங்கள் எல்லோரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.
இருந்தாலும் ஊடகங்களும் எதிரணியினரும் மிகப்பெரிய விம்பத்தை உண்டுபண்ணி ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்கிறார்கள். அது நடக்கலாம் நடக்காமல் போகலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஒரு தனித்தவமான கட்சியாக நாங்கள் எங்களது வளர்ச்சியை வளப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். அதில் மிக முக்கியமாக தமிழ்த் தேசியவாதிகளது செயற்பாடு. நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிண்ணையடியில் பேசியிருக்கிறார். அவர் கிட்டத்தட்ட ஒத்துக் கொள்ளாமல் ஒத்துக் கொண்ட விடயம் என்னவென்றால் இதைத்தானே பிள்ளையான் அவர்கள் கேட்டார்கள் இவர்கள் இப்பொது சொல்கிறார்கள். என்று என்னைச் சொல்லாமல் சொன்னார்.
ஆகையால் நாங்கள் 2008ஆம் ஆண்டு எடுத்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்திருக்கிறது. இடையில் அவர்கள் 2017அம் ஆண்டு வரைக்கும் இருந்த குழறுபடிகள் காரணமாக ஏதோ விரும்பியோ விரும்பாமலோ எங்களுக்குத் தேவையான ஆட்சியும் பொறுப்பும் அல்லது எங்களுக்கு வரவேண்டிய முதலமைச்சும் பொறுப்பும் மாற்றுச் சமூகத்தினருக்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கொடிபிடிப்பதோ ஆர்ப்பாட்டம் செய்வதோ அல்ல. ஆகையால் எல்லா விதமான பிரச்சினைகளையும் எதிர் கொள்ளக்கூடிய வெல்லக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் வளர்த்துக் கொண்டு உறுதியான ஒரு மாற்றுச்சிந்தனையோடு பலமான சிந்தனை மாற்றத்தோடு உறுதியான எண்ணத்தோடு உழைக்க வேண்டும்.இந்த நெருக்கடியான சூழலில் நீங்கள் அரசாங்கத்துக்கு நம்பிக்கையாகவும் நன்றியுணர்வோடும் செயற்பட வேண்டுமென மட்டக்களப்பில் இடம் பெற்ற நிகழ்வில் இவ்வாறு சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவித்தார்.