விடைபெறுகிறார் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் !

கொவிட் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கும் தடுப்பூசி திட்டத்துக்கும் அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
பதவி விலகும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸுக்கு நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் பிரியாவிடை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளுக்கு தூதுவர் டெப்லிட்ஸுக்கு நன்றி தெரிவித்த அவர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது பதவிக் காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு தூதுவர் டெப்லிட்ஸ் நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி மற்றும் அரசியல்/பொருளாதார கவுன்சிலர் சூசன் வால்கே ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிருந்தனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *