“ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.” – பிள்ளையான் 

அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஏறாவூர்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,
கடந்த காலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் பாற் பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன்.விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அரசியல் போராட்டங்களை மட்டும் முன்னெடுக்காது மக்களின் சார்பில் இருந்து ஆளுங்கட்சியிலிருந்து மக்களுக்கு தீர்வை நான் பெற்றுக் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *