காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் !

கொழும்பு – வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

13 – 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *