25 ஆண்டுகளுக்கு முன்னர் பல சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகம் – கனடாவில் தமிழர் கைது !

கனடாவின் ஒஷாவா பகுதியை சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஸ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலகட்டத்தில் சிறார் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

9 முதல் 14 வயதுடைய சிறார்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளது ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நெருக்கமான மற்றும் நன்கு அறிமுகமான சிறார்களையே இவர் சீரழித்துள்ளதும், ஸ்கார்பரோ பகுதியில் பல இளம் பெண்களை இவர் துஸ்பிரயோகத்திற்கு இலக்காக்கியதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 28ம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகப்பூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர்களும் பொலிஸ் அதிகாரிகளை அணுகி நடந்தவற்றை புகாராக தெரிவிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *