வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை.

navy_rg.jpgசமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலக தொடர்பாடல் பிரிவின் அறிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் மனிதக் கேடயங்களாக மக்களைப் பாவிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கடந்த சில நாட்களில் 30000 க்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து தப்பி வந்துள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் தற்போதைய தேவைகளைக் கண்டறியவும் அவர்கள் தம் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரை இடம் பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவனிப்பதற்கான திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடவும் சென்ற வார இறுதியில் மீள்குடியமர்வு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் கௌரவ ரிசாட் பதியுத்தீன் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கி வவுனியா சென்றிருந்தார். அக்குழுவில் அரசாங்க மற்றும் ஐ.நா. அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் அடங்கினர்.

இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் தற்போது நிறைவு செய்யப்படுகின்றன. அவர்கள் வவுனியா வந்ததும் வைத்தியர்கள் அவர்கள் உடல் நிலையைப் பரிசோதித்து தேவையானவகளுக்கு மருந்துகளை வழங்கி அவர்களுள் கடுமையாக நோய்வாய்ப் பட்டவர்களை ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்றனர். வன்னியில் இருந்து களைத்துப் போய் வந்த அவர்களுக்கு உடனடியாக சூடான உணவும் பானங்களும் வழங்கப்படுகின்றன. விசேடக் கவனிப்புத் தேவைப்படும் முதியர்வகள் அவர்களுக்கான இல்லங்களில் சேர்க்கப்படுவதோடு மத குருமாரும் அநாதைகளும் மதத் தலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஏனைய சகல இடம்பெயர்ந்தோரும் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் ஓரிரு வாரங்கள் தங்க வைக்கப்படுகின்றனர். பாடசாலைகளிலேயே பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் சுகாதார வசதிகளை இம்முகாம்களில் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு முகாம்கள் போதாதவிடத்து சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மேலதிக தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான உணவு மற்றும் சவர்க்காரம் உடுதுணிகள் போன்றவை குறைவின்றி வழங்கப்படுகின்றன.

சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன என்ற போதிலும் அவற்றை மிக அவசரமாக நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற வார விஜயத்தின் போது இடம்பெயர்ந்தோருக்கு வழங்ககப்படும் உணவின் தரம் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்தல் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.

வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக இடம் பெயர்ந்தோர் தமது உணவைத் தாமே தாயரிக்கும் திட்டம் ஒன்றையும் அரசாங்கம் இவ்வாரம் பரீட்சித்து வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆட்களை இலகுவாகக் கண்டு பிடிப்பதற்கு வசதியாக கணனித் தரவுத் திரட்டு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் மென்பொருள் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைக் கொண்டதொரு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு ஐ.நா. மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒருங்கிணைப்பும் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. கள நிலைமையை எடுத்துக் கொண்டால் இடைத்தங்கல் முகாம்களின் நிருவாகம் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் தினமும் கூட்டங்களை நடாத்துகின்றனர்.

தற்போது இடைத்தங்கல் முகாம்கள் ஆட்களினால் நிரம்பியுள்ளதால் மக்களுக்குப் போதிய இடவசதியையும் மாணவர்கள் தம் கல்வியைத் தொடர்வதற்கு வசதியளிப்பதற்காகவும் ஏற்றவாறு விசாலமான தற்காலிக வீடுகளை அமைப்பதற்காக யூஎன்எச்சிஆருக்கு ஒரு காணித்துண்டை வழங்குவது பற்றியும் இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டது.

இக்குடியிருப்புக்கள் அரசாங்கம் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நலன்புரி கிராமங்களின்; அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளன. இக்கிராமங்கள் பொதுவாக இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களைவிட மாறுபட்டதாகவும் சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. மாண்புமிகு ஜனாதிபதி சீன விஜயத்தின் போது பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனசமூக வசதிகளுடன் சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கிராமங்களை கண்டு அவற்றைப் போலவே இந்நலன்புரி நிலையங்களை அமைக்க வேண்டும் என விரும்பியதன் விளைவாக இந்நலன்புரி நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டன.

தொடர்பாடல் பிரிவு
சமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *