இலங்கை பிரீமியர் லீக் வீரர்கள் தெரிவு தொடர்பில் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி !

எல்.பி.எல் இற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குசல் ஜனித் பெரேரா, சந்திமல், மத்தியுஸ், தனஞ்சய டிசில்வா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே மஹேல தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்

எல்.பி.எல் 2021 இற்கு மிகவும் சுவாரசியமான தெரிவுகளும் தெரிவின்மைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அடி முன்னோக்கி சென்ற பின்னர் ஐந்து அடி பின்னோக்கி சென்றால் நாடு முன்னேற்றம் காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையான திறமையை வளர்த்தெடுப்பதற்கான ஒரு களம் என்பதை இலங்கை கிரிக்கெட் சபை மறக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *