இலங்கையில் நசுக்கப்படும் கருத்துச்சுதந்திரம் – அரசாங்கத்தை விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை !

சமூக ஊடகங்களில் அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை உள்துறை இராஜாங்க அமைச்சு பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும், கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அரச சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கும் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………

 

இலங்கையில் அண்மைக்காலங்களில் மக்களுடைய கருத்து்சுதந்திரம் கடுமையாக அடக்கப்பட்டு வருகின்றது. இன்றைய அரசாங்கம் மட்டுமன்றி கடந்தகால நல்லாட்சி அரசாங்கமும் கூட இதே வேலைகளை செய்ததது. ஜனநாயகம் என்ற கருத்தியல் அரசியல் யாப்பில் மட்டுமே எழுத்துவடிவில் காணப்பட்டு வருவது போல தோன்றுகிறது.எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. ஆளாளுக்கு விவாதிக்கிறார்கள் என்ற கருத்துக்களை எல்லாம் ஏற்க முடியாது.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என இலங்கையின் அரசியல் யாப்புத்திட்டம் உறுதிப்படுத்துகின்றது. இந்த நிலையில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அடக்கப்படுவது இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கையே காட்டுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *