இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – முடிவுக்கு வந்த அரசின் 07 மாத நாடகம் !

இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் இரசாயன உர நடனம் இன்றுடன் முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் இதனைச் செய்ய முடியாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறினர்.

வாயால் வற்றாலை  நடுவது போல்தான் இருந்தது அவர்களின் கருத்து. தற்போது நாங்கள் உதவித் தொகை வழங்கப்போவதில்லை. இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளும் தரப்பினர் கூறினர்.

நாட்டில் கடந்த 7 மாத காலமாக நடித்த நாடகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடித்த நாடகமும் தட்டிய தாலமும் இன்று இல்லை. அரசாங்கம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நடனம் ஆடியது என்றும் தோ்தலின்போது “அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”,” கொரோனா பாணி நடனம் ஆடியது”, ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்றும் காபனிக் நடனம் இன்றுடன் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *