தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க தீர்மானம் !

நாய் இறைச்சிக்கு தடை விதிப்பது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

தென் கொரியா நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சராசரியாக பத்து லட்சம் முதல் 15 லட்சம் நாய்கள் வரை கொல்லப்படுகின்றன.

இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், தென் கொரியா அரசு நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்துத்துறை பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *