யாழில் 2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதியை மீள அமைக்குமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை !

“2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதி இன்னமும் கட்டப்படாது உரிய மகப்பேற்றுவிடுதியின்றி யாழ் போதானவைத்திய சாலை இயங்குகிறது  உடனடியாக இங்கு புதியமகப்பேற்று விடுதி அமைக்கப்படவேண்டும்.” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான காலப்பகுதியில் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் வைத்தியதுறை சார்ந்தவர்களிற்கும் சுகாதார துறை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தலை சாய்த்து என் நன்றிகளையும் பாராட்டுகளையும் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டும் குறைந்த வசதிகளுடன் இயங்கும் வடக்கு கிழக்கு மாகாண சுகாதார்த்துறையினருக்கு எனது பெருமதிப்பை தெரிவிக்க விரும்புகிறேன் .

2013 இல் இடிக்கப்பட்ட மகப்பேற்று விடுதி இன்னமும் கட்டப்ப்டாது உரிய மகப்பேற்றுவிடுதியின்றி யாழ் போதானவைத்திய சாலை இயங்குகிறது . உடனடியாக இங்கு புதியமகப்பேற்று விடுதி அமைக்கப்படவேண்டும்.

மேலும்  வடக்கு சுகாதார துறை  மிகுந்த ஆளணிப்பற்றாக்குறையுடன் இயங்குகிறது . இவை உடனடியாக நிரப்பட்ட வேண்டும்.குடிசன வளர்ச்சிக்கேற்றப் புதிய ஆளணி உருவாக்கப்படவேண்டும். எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைக்கு உட்பட்ட வைத்த்திய சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும் .வடக்கில் பல வைத்தியசாலைகள் வைத்தியர்களோ தாதியர்களோ இல்லாமல் இயங்குகிறது. இது உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.” போன்ற விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *