“உலகில் வேறு எந்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத்தையும் விட பயங்கரமானது இஸ்லாமிய தீவிரவாதம்.” – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் ஞானசாரதேரர் காட்டம் !

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசியுள்ள அவர் ,

உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது . சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும்.

உலகில் மததீவிரவாதம் உட்பட பல வகையான தீவிரவாதங்கள் காணப்படுகின்ற போதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் மிகவும் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த தீவிரவாதத்தின் விளைவுகளும்- பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமே மிகவும் பயங்கரமானது காட்டுமிராண்டித்தனமானது ஏனைய தீவிரவாதங்கள் இதற்கு அருகில் நெருங்ககூட முடியாது மனிதர்கள் நூற்றாண்டுகளாக சாதித்த விழுமியங்களை அது தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *