பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கக் கோரி மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

பசியும் வன்முறையும் இல்லாத தன்னிறைவான வாழ்வு எமக்கு வேண்டும். வன்முறைகளை நிறுத்துவதற்கு அரசினதும் அரசியல் ரீதியானதுமான முன்னெடுப்பு உடனடியாக எமக்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இன்றைய தினம் மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகளால் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பினுடைய ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற இப் பேரணியானது மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் இருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்றது.பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரத்தின் ஒரு பகுதியாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இப் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் பறைமேளம் அடித்து, நீளப் பேரணியாகச் சென்றனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வார நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது.பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் உணவுப் பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதுடன் உணவு விநியோகத்தினையும் இலகுபடுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பசி பட்டினியிலிருந்து மக்களை விடுவிக்க சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை அரசு உடனடியான அமுல்படுத்த வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படாத உள்ளுர்வளப் பொருளாதார முறைமையை பிரதானமாக்கும் நடைமுறைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பாவித்து கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பாதைகளை பேரணியில் சென்றவர்கள் ஏந்தி சென்றனர். இந் நிகழ்வுகள் கடந்த 25ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *