பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் – மேலும் 33 பேர் கைது !

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதன படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 33 முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நேற்று (17) தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குஜ்ரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்று புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 52 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *