தொடர்ந்து பதவி விலகும் விவசாய அமைச்சின் செயலாளர்கள் – காரணம் என்ன..?

விவசாய அமைச்சில் திறமையான, நேர்மையான, சிறந்த அதிகாரிகள் இருந்த போதிலும், ஆலோசகர்கள் என்ற போர்வையில் சில நபர்கள் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார்.

விவசாய அமைச்சின் புதிய செயலாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் திறமையான செயலாளர்கள் பதவி விலகுவதற்கான முக்கிய காரணம் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

திறமையான அரச ஊழியரான பேராசிரியர் உதித் ஜயசிங்க, அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்வமாக இருந்ததுடன், வெளிப்புற தாக்கங்களினால் அவரால் முறையாக செயற்பட இயலாமல் போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *