மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் !

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, எரியூட்டிய வைத்தியசாலை உரிமையாளருக்கு, 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ்.நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் வித்தித்துள்ளது.

குறித்த தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி எரியூட்டிய நிலையில் அயலவர்களால், மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர சபை உறுப்பினர்கள, சுகாதார பிரிவினர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை உரிமையாளருக்கு எதிராக யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால், யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிக்கு பாவித்த மருந்து போத்தல்களை வீசியமை, தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிகளினது Toilet pampers வீசியமை, தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த ஊசிகளை வீசியமை,தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த சேலைன் போத்தல்களை வீசியமை,தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த இரத்த பரிசோதனை குப்பிகளை வீசியமை, சத்திர சிகிச்சைக் கையுறை மற்றும் அங்கிகளை வீசியமை,தொற்று நோயை பரப்பும் வகையில் றெஜிபோம் மற்றும் படுக்கை மெத்தைகளை வீசியமை ஆகிய 7 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தஅனைத்து குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதனை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *