நியூயோர்க்கில் தொடர் மாடிக் குடியிருப்பில் தீப்பரவல் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலி !

நியூயோர்க்கில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் இந்த தீப்பரவலில் காயமடைந்த மேலும் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர முதல்வர் எரிக் அடம்ஸ் (Eric Adams) தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 தளங்களை கொண்ட குறித்த தொடர் மாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் பலர் தீப்பரவலில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *