“1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டதாலேயே பொருளாதார நெருக்கடியை சமாளித்தோம்.” – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 1.4 டிரில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் அனில் பெரேரா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் தெரிவித் துள்ளனர்.

வரலாற்றில் வேறு எந்த வருடமும் இவ்வளவு பெரிய தொகை அச்சிடப் பட்டதில்லை என்றும், பணத்தை அச்சடித்ததன் மூலம் நெருக்கடியை சமாளிக்க முடிந்ததாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *