விலை உயர்வால் பட்டினியில் மக்கள் – ஒரே வருடத்தில் 09 கோடிக்கு தின்று தீர்த்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் !

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் பொருளாதார நிலை மிக கீழான நிலையில் காணப்படுகின்றது. மக்கள் அடுத்த வேளை உணவுக்காக அலை மோதிக்கொண்டிருக்கின்றனர். மக்களுடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாது விட்டாலும் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆடம்பரமான வீடுகள்- வாகன இறக்குமதி – வெளிநாட்டு சுற்றுப்பயணம் என இவர்கள் ஆடம்பர வாழக்கையில் திளைக்கின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் உணவு மற்றும் குடிபானங்களுக்காக மாத்திரம் கடந்த ஆண்டு சுமார் 9 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற குழுக்களுக்கு முன்னிலையில் சமூகமளிக்கும் அரச அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தினாலேயே உணவு விநியோகிக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதேவேளை, பாராளுமன்றத்தில் உணவு பொருட்களில் முன்னெடுக்கப்படுகின்ற மோசடிகள் மற்றும் வீண்விரயங்களை தவிர்ப்பதற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பயண பொதிகள் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. அரிசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உணவு சமைக்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *