பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கையர் – நட்டஈட்டை வழங்கிய பாகிஸ்தான் !

பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது.
பிரியந்த குடும்பத்திற்கு பாகிஸ்தான் கோடிக்கணக்கான ரூபாவை வழங்கியது
பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI அறிவித்துள்ளது.

இதன்படி, 100,000 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா. 20252320.00) மற்றும் அவரது முதல் மாத சம்பளமான 1667 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா.337606.17) பணம், பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டமைக்கான ஆவணங்களை PTI கட்சி, வெளியிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *