கொரோனா முகக்கவசங்களுக்கு goodbye சொல்கிறது இங்கிலாந்து !

சுமார் 2 வருடங்களாக கொரோனா உலகை முழுமையாக உலுக்கி வருகின்ற நிலையில் அதனுடைய வீரியம் குறைந்தபாடில்லை. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள் முறையாக இதனை ஒரளவு கட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக கொரானா கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்து அரசு அந்நாட்டு பிரஜைகளுக்கு மகிழ்வான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் “இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து ‘பிளான் -ஏ’க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

ஓமிக்ரோன் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ‘இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும் போது இந்த நாடு என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது’ என கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *