தீயில் எரிந்து தாயும் 17 வயது மகளும் பலி – கிளிநொச்சியில் சோகம் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 11.50 மணியலவில் தாயும், அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் அச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் கொலையாக இருக்குமா…?, எனும் கோணத்தில் பொலிசார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயாரும், 17 வயதுடைய லக்சிகா எனும் அவரது மகளுமே இவ்வாறு உயிரிந்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *