கிளிநொச்சியில் வீடு எரிந்து தாயும் – மகளும் உயிரிழந்த விவகாரம் – நேரில் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய லக்சிகா ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக நேற்று தருமபுர பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை)  சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் பார்வையிட்டார்.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோல் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபேசி என்பனவற்தை தடையவியல் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *