“ராஜபக்ஷ அரசு முழுமையாக இலஞ்சத்தால் நிறைந்துள்ளது.” – சஜித் பிரேமதாச

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி இயற்கை உரங்களை பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்டதா..? என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நிர்ணயித்த விலைக்கு இலங்கையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது. தொற்றுநோயின் போது பொதுமக்கள் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.  அரிசி மீதான விலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

தற்போதைய நிர்வாகம் கப்பம் மற்றும் இலஞ்சம் நிறைந்தது. ஆட்சியில் இருக்கும்போது உர மானியம் வழங்குவதாக உறுதியளித்த நிலையில் , அரசாங்கத்தின் தவறான முடிவுகளால் விவசாயிகள் சுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *