அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் – வரலாறு படைத்தார் ஆஷ்லே பார்டி !

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளார்.

44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்ரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார்.

மெல்போனில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று இடம்பெற்றது.

இதில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸை எதிர்கொண்ட ஆஷ்லே பார்டி போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனை அடுத்து விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது செட், டை பிரெக்வரை நீடிக்க அதனையும் போராடி ஆஷ்லே பார்டி 7-6 என கைப்பற்றினார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டேனியல் காலின்ஸை 6-3, 7-6 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாவது பட்டத்தை வென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *