நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம். தயாராக இருக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஆளுந்தரப்பு சவால் !

நாம் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் அதற்கு எதிர்கட்சிகள் தயாராக இருங்கள் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மாகாணசபை தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை எதிர்கட்சியினர் தேர்தலை நடத்தக்கோரினால் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமும் தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இதே நேரம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல் நிலை காரணமாக விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ , “

எந்தத் தேர்தலையும் எந்த வேளையிலும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஆனால், ராஜபக்ச அரசுக்கு தேர்தலை எதிர்கொள்ளும் திராணி இல்லை. அதனால்தான் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு இந்த அரசு நீடித்தது. இப்போது விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்து வருகின்றது என வெளியாகியுள்ள செய்தி வேடிக்கையாகவுள்ளது.எந்தத் தேர்தல் நடந்தாலும் ராஜபக்ச அரசு படுதோல்வியடைவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் தெிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *