“கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி !

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நேற்று (8) பாராளுமன்ற விவாதத்தின் போதே இதை தெரிவித்தார்.

மேலும், கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதற்கு சில நாடுகள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார,“கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சிறுமிகளின் கருவில் உள்ள சிசுவை (கருவை) அகற்றும் நடைமுறை இல்லாத காரணத்தினால் சிலர் தற்கொலை செய்து கொண்ட சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது முக்கியம்” எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர்,

கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின் கீழ் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *